மேற்குக் கரையில் காணாமல் போன சிறுவனை தேடும் இஸ்ரேலிய நடவடிக்கையின் போது வன்முறை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த பகுதியில் யூத குடிமக்களுடன் நடந்த மோதலில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாகவும் 25 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
காணாமல் போன 14 வயதுடைய பெஞ்சமின் அஹிமைர் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவரைத் தேடும் நடவடிக்கை பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
இதேவேளை, மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் உயிரிழந்த இருவரில் ஒருவர் உள்ளூர் தளபதி என்பதை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், முகமது தரக்மே தனது படைகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.