பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வியாழன் அன்று ஒரு கொடூரமான சம்பவத்தில், வறுமையில் வாடும் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளை கோடாரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, முசாபர்கர் மாவட்டம் அலிபூரில். லாகூரிலிருந்து 350 கி.மீ துயரசத்தில் தொழிலாளியான சஜ்ஜத் கோகர், தனது மனைவி கவுசர் 42, மற்றும் எட்டு மாதங்கள் முதல் 10 வயது வரை உள்ள நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் ஆகிய ஏழு குழந்தைகளை கோடரியால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் நிதிப் பிரச்சினையில் மன உளைச்சலில் இருந்ததாகவும், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தனது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத காரணத்தினால் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிகின்றனர்.
மேலும்,பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன் காவல் கண்காணிப்பாளரிடம் குறித்த விடையம் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளார்.