இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் ஏமாற்றப்படுவதும், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்து கின்ற செயற்பாடுகள் கடந்த காலங்களில் பதிவாகின்றன.
இந்நிலையில், களுத்துறையில் தன்னை ஏமாற்றிய உணவகதின் உரிமையாளரினுடைய செயற்பாடுகளினை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமூக ஊடகத்தின் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன்படி, டிம் டென்ஸ் என்கின்ற பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி, இலங்கையினை சுற்றிப்பாப்பதற்காக வந்துள்ள நிலையில், நாட்டினுடைய தோற்றம், மற்றும் சிறப்பு அமசங்கள் தொடர்பாக ஆவணப்படங்களினை தயாரித்து வருகின்றார்.
இவ்வாறான பின்னணியில் தான் செல்லுகின்ற இடங்களையும் அங்குள்ள சிறப்புகள், உணவு உள்ளிட்ட அனைத்வகையான விடயங்களையும் அவர் சமூக ஊடகத்தின் ஊடாக நேரலையாக வெளியிட்டு வருவதுடன் களுத்துறைக்கு பயணித்த அவர் உணவகமொன்றுக்குச் சென்று உளுந்து வடை மற்றும் ஒரு கோப்பை தேனீர் அருந்தியுள்ளார்.
இதற்காக குறித்த உணவாக உரிமையாளர் அவரிடமிருந்து 1000 ரூபா கேட்டுள்ள நிலையில் குறித்த விலையானது நியாயமற்றது என வெளிநாட்டவர் மிகவும் பணிவாகக் கூறி , 800 ரூபாவினை பெற்றுக்கொண்டுள்ளார் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பாரிய விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகின்றது.