சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவை இலங்கையில் அரச வங்கிகளின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துள்ளன.
இதன்படி, இடர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் இலங்கையின் அரச வங்கி அமைப்பில் மேற்பார்வை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட நிபுணர் குழுவின் ஆலோசனையின் கீழ் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், குறித்த சீர்திருத்தங்கள் அரச வங்கி முறையின் திறன், செயல்திறன் மற்றும் நிதித் துறையின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட உள்ளன.