அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்ணூற்றைந்து தனியார் பாடசாலைகளில் ஐந்து பாடசாலைகள் மட்டுமே முந்தைய ஆண்டு தொடர்பான வருமான செலவு அறிக்கையை கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளன.
இதன்படி, ஜனவரி மாத இறுதிக்குள் வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை அனுப்புவது கட்டாயம் என்றும், இது குறித்து அனைத்து பாடசாலைகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வருமானச் செலவு அறிக்கை தொடர்பான சுற்று நிருபத்தை மீறி அப்பாடசாலைகளின் உண்மையான வருமானம் வெளியாவதைத் தவிர்க்கும் வகையில் பாடசாலைகள் செயற்படுவதாக வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலும் கண்டியிலும் தலா இரண்டு பாடசாலைகளும் யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலை மாத்திரமே இதுவரையில் அறிக்கைகள் அனுப்பியுள்ளதாகவும் கல்லூரியின் சார்பில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள், மாணவர்களின் பணம், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் வெளியூர் நன்கொடைகள், நீச்சல் குளம் வருமானம், விளையாட்டு போட்டி டிக்கெட் வருமானம், பாடசாலை வளாகத்தில் நடத்தப்படும் வணிக மற்றும் வளாகத்தின் பசுமை மூலம் கிடைக்கும் வருமானம் பற்றிய தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் செலவுகள், கட்டிடங்கள் மற்றும் பாடசாலையின் பழுது மற்றும் பராமரிப்பு ஆகியவை அமைச்சகத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையானது அக்டோபர் 2005 இல் வெளியிடப்பட் டதோடு மேற்படி சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நினைவூட்டலாக மே 2022 இல் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.