அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்படி, கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கீழே போடப்பட்டிருந்த தண்ணீர் குழாயில் இருந்து குளித்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ருஹுணுகம பிரதேசத்த்தை சேர்ந்த 03 வயது 07 மாதமான குறித்த சிறுமியினுடைய உடலில் நீர் தாங்கி வீழுந்துள்ள நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (14) இடம்பெறவுள்ளது.