மித்தெனிய உலஹிதியாவ பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடானது நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளதுடன் துபாயில் “பெல்லி ராணா” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த நபரின் திட்டப்படி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
எனினும் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.