ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலை காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் பயணித்த இலங்கையர்கள் குழு துபாயில் சிக்கியுள்ளனர்.
இதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, இஸ்ரேல் எல்லையில் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தும் என்ற தகவலின் அடிப்படையில் பயணிகளில் பல இலங்கையர்களுடன் இருந்த விமானம் துபாய்க்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, பிராந்தியத்தில் விமான தாமதங்கள் ஏற்படுவதாகவும், அப்பகுதிக்கு அல்லது அப்பகுதி வழியாகப் பயணிக்கும் இலங்கையர்கள் விமான நேர அட்டவணையில் சாத்தியமான மாற்றங்களுக்கு தொடர்புடைய விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.