அம்பலாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட 7600 சிகரெட்டுகள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் இருந்த பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெண் மற்றும் சிகரெட்டுகளை அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
சந்தேகநபர் எதிர்வரும் 18ஆம் திகதி பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக, சுற்றிவளைப்பை மேற்கொண்ட எல்பிட்டிய பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.