கலேவெல, அலுத்வெவ மற்றும் வேல்பாறை சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லை செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தீர்க்க குறுக்கிட்ட இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு பலத்த காயமடைந்த இளைஞன் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கலேவெல, பம்பரகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கலேவெல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.