முன்னதாக வழங்கப்பட்ட வரியில்லா அனுமதிப்பத்திரத்தை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வழங்க முடியாவிட்டால், குறைந்த விலையில் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மற்றும் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் தேர்தலில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாகனங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை இரு அரசியல் கட்சிகளினதும் உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டு, எம்.பி.க்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் இது தொடர்பில் தீர்மானம் எடுக்காமல் தவிர்த்துள்ளது.