ஹக்மன, கத்தகஹகொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை ஹக்மன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
21 வயதுடைய இளைஞனை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹட்டகஹகொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான உயிரிழந்த இளைஞனின் மாமா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவத்தின் பின்னர் ஹக்மான பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றதுடன், கல்கந்த பிரதேசத்தில் பதுங்கியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.