போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுலே சஞ்சீவவின் முக்கிய நபரான திக்பிடிகொட லஹிருவின் சீடன் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கல்வல வத்த, ராகம கண்டலியத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 526 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம, கல்வல வத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தற்போது பொலிஸ் காவலில் உள்ள . “கணேமுல்லே சஞ்சீவ”வின் பிரதான சீடரான “திக்பிடிகொட லஹிரு” என்பவருக்கு நாட்டில் போதைப்பொருள் விநியோகம் செய்பவராக சந்தேகநபர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.