மேல் மற்றும் தென் மாகாணங்களை மையமாக கொண்டு பாதாள உலக நீதி விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதாள உலக குற்றவாளியான “கெஹல்பெத்தர பத்மே” என்பவரின் சீடர் ஒருவர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் மற்றும் தோட்டாக்கள் பலவற்றை பேலியகொட விஷேட பாதாள உலக குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலகக் குற்றவாளியான கெஹெல்பெத்தர பத்மேவின் சீடனாக தற்போது துபாயில் தலைமறைவாகியிருக்கும் சந்தேகநபரான அவிஷ்க மதுசங்க என்ற ‘கிரி கொல்ல’வின் குற்றப் பங்காளியான 44 வயதுடைய நீர்கொழும்பைச் சேர்ந்த நெரஞ்ச லக்மால் முனசிங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது மேலும் 25 வயதுடைய பெண் சந்தேக நபரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.