பொலிஸ் சி.சி.டி.வி கேமரா அமைப்புகளுடன் பொது மற்றும் தனியார் துறைக்கு சொந்தமான கேமரா அமைப்புகளை இணைத்து குற்றங்களை கண்டறியும் பாதுகாப்பு கேமரா அமைப்பை விரிவுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பு நகரின் தனியார் பிரிவின் சி.சி.டி.வி கேமராக்களை பொலிஸாரின் இரண்டாயிரம் சி.சி.டி.வி கேமரா அமைப்பில் இணைந்து கொள்ள விரும்புபவர்களுடன் கலந்தாலோசித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த கேமரா வரம்பை விஸ்தரிப்பதுடன், இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள கேமரா அமைப்புகளுடன் பொலிஸ் கேமரா அமைப்பு இணைக்கப்படும் என்றும் அவர் கூறியதோடு கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சி.சி.டி.வி நூறாயிரக்கணக்கான கேமராக்கள் இருந்தாலும், நாட்டில் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவற்றின் பங்களிப்பு மிகக் குறைவு எனவும் தெரிவித்தார்.
மேலும், தென் கொரியா, இந்தியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளும் பாதுகாப்பு கேமரா அமைப்புகளைப் பயன்படுத்தி குற்றங்களை எதிர்த்துப் போராடும் வகையில் இந்த முறையை நாடு முழுவதும் செயல்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.