ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய தலைவராக தாம் பதவியேற்றதன் பிற்பாடு தாம் எந்தவிதமான மோசடியையும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் ஏதேனும் மோசடி செய்திருந்தால், அதை யாராவது வெளியிடுமாறு சவால் விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.