2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்ததில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அதன் நிர்வாகத்தின் கீழ் முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த வாக்குறுதி ஏப்ரல் 21 அன்று வரும் ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நிறைவிற்கு சில நாட்களுக்கு முன்னதாக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் அறிக்கையில், இந்த கொடூரமான செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்திற்கு கடப்பாடு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதுடன், அதே நேரத்தில் இது சரியாக நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
மேலும், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக எதிர்கால தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்த விரும்பும் 7 அம்ச செயல் திட்டத்தையும் கட்சி முன்வைத்தது.