சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை இசுறுஉயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் களுத்துறை தெற்கு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மட்டக்குளி மற்றும் அநுராதபுரம் பொலிஸ் பிரிவுகளில் மேலும் 02 அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்குளி பெர்குசன் வீதிப் பகுதியில் உள்ள களனிகங்கைக் கரையில் 20 முதல் 25 வயதுடைய இளம் பெண்ணொருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர குருவிட்ட பிரதேசத்தில் நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பெட்டகொடோ பஸ்தியான் மாவத்தை பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.