இலங்கை மின்சார சட்டமூலம் நேற்று (17) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார துறையில் உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய இலங்கை மின்சார சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனவரி மாதம் பங்குதாரர்களால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சம்பந்தப்பட்ட மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான தன்மையை சவால் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.