விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு சட்டரீதியாக இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத உறுப்பினர்களுக்கு இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த பொது மன்னிப்புக் காலத்தில், அவர்களது படைப்பிரிவு மையங்களைத் தொடர்பு கொண்டு சட்டப்பூர்வமாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்படும்.
இதேவேளை, ஏப்ரல் 02 மற்றும் அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் உரிய ஆவணங்களுடன் தமது படைப்பிரிவு நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் 72 மணித்தியாலங்களுக்குள் இராணுவ சேவையிலிருந்து வெளியேறுவதற்கான அடிப்படைக் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக விலகுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் பின்வரும் ஆவணங்களையும் கொண்டு வருமாறு இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
- இராணுவ அடையாள அட்டை (இராணுவ அடையாள அட்டைகாணவில்லை என்றால் சமீபத்திய போலீஸ் அறிக்கையின் நகல்)
- தேசிய அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமத்தின் நகல்.
- சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் புகைப்பட நகல்.
- ஊதியம் மற்றும் அலவன்ஸ்கள் வரையப்பட்ட கடைசி ஊதியச் சீட்டின் புகைப்பட நகல் (கிடைத்தால் மட்டும்)