உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக கருதப்படும் துபாய் சர்வதேச விமான நிலையம் மேலும் சீர்குலைந்துள்ளது.
பெய்து வரும் மழையின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராததே இதற்குக் காரணம் எனவும் நேற்று மட்டும் 300 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 440 விமானங்கள் தாமதமாக வந்துள்ளன.
அத்தோடு, சில பயணிகள் 12 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் 80 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்யும் துபாய் விமான நிலையத்தை சீரமைக்க கணிசமான காலம் எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துபாயின் ஆண்டு சராசரி மழையளவு 97 மி.மீ. என்பதோடு ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்ச மதிப்பு 08 மிமீ ஆகும்.
ஆனால் 24 மணித்தியாலங்களில் துபாயை சூழவுள்ள பகுதியில் 254 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.