இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்.மிசுகோஷி ஹிடேகி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கும் போதைப்பொருள் ஒழிப்புக்காகவும் இலங்கை பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீதி நடவடிக்கையை பாராட்டுவதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்குவது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் தூதுவர் மற்றும் அமைச்சர் திரன் அலஸ் ஆகியோர் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
அத்தோடு, இலங்கையில் தற்போது செயற்படும் சமூக பொலிஸ் குழு வேலைத்திட்டத்தின் வெற்றி மற்றும் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் திரான் அலஸ் அவர்கள் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகியிடம் தெரிவித்தார்.
மேலும், ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, எதிர்காலத்தில் அமைச்சர் திரான் அலஸை மீண்டும் சந்திப்பார் என்றும், மேலே பேசப்பட்ட விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.