குருநாகல், ரிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இன்று காலை தனியார் காணியொன்றில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, உயிரிழந்தவர் அதே பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய கோழி வியாபாரி எனவும் கொலையை செய்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.