விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத தமது உறுப்பினர்களுக்கு இன்று முதல் மே 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி பணிக்கு அறிக்கை செய்யாத தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் தொழில்முறை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளின் மாலுமிகள் சட்டரீதியாக சேவையில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
இதன்படி, தகுதியான கடற்படை உறுப்பினர்கள் தங்களுக்கு அருகிலுள்ள கடற்படைத் தளத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தற்போது விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் கடற்படையினர் மீண்டும் அறிக்கை செய்யாமல் சட்டரீதியாக சேவையில் இருந்து வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு இன்று முதல் ஒரு மாத காலத்திற்குள் சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.