உத்தேச மின்சார சட்டத்தின் மூலம் நாட்டின் நீர்மின் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட மின்சார சீர்திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த மசோதா அடுத்த வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பில் இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஒரு சில தொழிற்சங்க தலைவர்களுக்கு மாத்திரமே பிரச்சினைகள் ஏற்படும் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலத்தின் ஊடாக அரசியல் தலையீடுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.