காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் இருந்து 17 ஆமைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் வசிக்கும் இருவர் மட்டக்களப்புக்கு வந்த போது சட்டவிரோதமான முறையில் ஆமைகளை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டெடுக்கப்பட்ட ஆமைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.