கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கல்வித்துறையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி மற்றும் கல்வி கற்பதற்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 தேசிய கல்வியியற் கல்லூரிகளின் கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள், அதிபர்கள் மற்றும் இலங்கை கல்விப் பல்கலைக்கழகத்தின் கல்வி நிர்வாகிகள் மற்றும் பீட உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பதில் அதிபர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதுடன், கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்காரவும் இதில் கலந்துகொண்டார்.