ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தடைந்துள்ளார்.
இதன்படி, அவரும் அவரது குழுவினரும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் முகமாக ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் உமா ஓயா விழா நடைபெறும் பகுதிக்கு செல்லவுள்ளனர்.
எனவே, வெல்லவாயவிலிருந்து வெல்லவாய, வெல்லவாய ஊடாக மத்தள, தனமல்வில, குடுஓயா மற்றும் எல்ல வீதி ஊடாக உமா ஓயா சந்திக்கும் வீதி காலை 11 மணி வரை பகுதியளவில் மூடப்பட்ட து.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில் ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அஹமதிநெஜாட்டின் வருகைக்குப் பின்னர் ஈரானிய ஜனாதிபதி ஒருவர் இந்நாட்டிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.