ஈரானுடன் நெருக்கமான உறவுகளை தொடரப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டத்தை திறந்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஈரானிய தொழில்நுட்பத்தின் மூலம் உமா ஓயா உபநதிகளை மகாவலி ஓயாவிற்கு அனுப்பாமல் கிரிடியோவிற்கு உபரி நீரை கொண்டு வந்துள்ளோம். ஈரானிடம் இருந்து பெறப்பட்ட தொழில்நுட்பத்தினால் எம்மால் அதனை செய்ய முடிந்தது.இன்று ஈரானின் தொழில்நுட்பம் மற்றும் ஆதரவினால் இப்பகுதிகளுக்கு நீர் கிடைத்துள்ளது. மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய முதலீடுகளை உருவாக்கி வருகிறோம்” என்றும் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.