அமெரிக்காவில் டிக்டாக் சமூக ஊடக வலையமைப்பை தடை செய்யும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அமெரிக்காவின் செனட் சபையில் கையெழுத்திட்ட பின்னரே அமெரிக்க அதிபர் அதற்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், புதிய முன்மொழிவின்படி, டிக்டாக்கை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு அதன் பங்குகளை ஏலம் விட 09 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.