வெளிநாட்டு வேலைகளை தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்யுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புலனாய்வு பிரிவிற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த்த ஆட்கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், இவ்விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு பணியகத்தின் உயர் நிர்வாகத்திடம் அமைச்சர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.