2021 ஆம் ஆண்டு, மெட்டியகொட சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்ததன்பய, யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் லிஹினியாகல, மெட்டியகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 02 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடையவர் என்றும், அவர் கரந்தெனியே சுத்தா, ராஜு மற்றும் சமன் கொல்லா ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளின் முக்கிய உதவியாளர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பிடிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.