நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் நேற்று 632 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த நடவடிக்கையின் கீழ் நேற்று மாத்திரம் 634 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 210 கிராம் ஹெரோயின், 198 கிராம் ஐஸ் உட்பட பல வகையான போதைப்பொருள்களும் இச்சுற்றிவளைப்பில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.