வழங்கப்படாமல் உள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களை மிகக் குறுகிய காலத்திற்குள் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறு செய்வதன் ஊடாக வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் எனவும், அவ்வாறு செய்தால்தான் இந்த நிறுவனங்களில் நடக்கும் திருட்டு, மோசடிகள் குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் ஆட்கடத்தல்காரர்களும் சில அதிகாரிகளும் இதற்கு இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேலும் தெரிவித்தார்.