வில்கமுவ பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி இரவு பாதுகாப்பில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வில்கமுவ, கொங்கஹமுல பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி வில்கமுவ, நுககொல்ல கொங்கஹமுல சந்தியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் இருந்து கடந்த 23ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுவும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் மேற்கொண்ட நிலையி நாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிற்கு அடுத்துள்ள விவசாய கிணற்றுக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய மகசீன் எரிந்துள்ளதுடன் அதில் சேறும் சகதியுமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.