முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையின் மூலம் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு 1000 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இடைக்கால கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து அவர் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற கருத்தை உருவாக்கியுள்ளதை மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 14 நாட்களுக்குள் உரிய நட்டஈட்டை வழங்க வேண்டும் எனவும், தவறினால் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைத்துள்ள இடைக்கால கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.