மாங்குளம் வசந்தநகர் சந்தியில் இராணுவ கெப் வண்டி விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் 09 படையினரும் விபத்தில் காயமடைந்த நிலையில் அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் முருகண்டி முகாமில் கடமையாற்றி வந்த கல்கமுவ, அஹெதுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவத்தின் ஏழாவது சேவைப் படையில் கடமையாற்றும் சார்ஜன்ட் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மாங்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொறியொன்றும், முன்னால் சென்ற இராணுவ வீரர்கள் பயணித்த கெப் வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.