விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்கவின் பிணை கோரிக்கையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் உத்தரவு குறித்த அறிவிப்பு வரும் 30ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டி. என். சமரக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற ஆன்டிபாடிக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்டோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.