கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மாலை 05.00 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
கொழும்பு 05, கொழும்பு 06, தெஹிவளை – மவுண்ட் மற்றும் மொரட்டுவ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை ஆகிய பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆற்றலைப் பாதுகாக்கும் செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக குறித்த பிரதேசங்களில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.