எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் மற்று திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, விமான எரிபொருள் எண்ணெய் மற்று மசகு எண்ணெய் போன்ற பெட்ரோலியப் பொருட்களினுடைய இறக்குமதி, சுத்திகரித்தல் மற்று விநியோகம் அத்தோடு விற்பனை போன்றவற்றுக்கு தற்போதுள்ள சட்ட கட்டமைப்பாக இயங்கினாலும், இவற்றுக்கான விரிவான ஒழுங்குமுறையான வழிமுறை எதுவும் இல்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பெட்ரோலியம் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகத்தில் பல தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளதால், இத்துறையின் சவால்களுக்கு தீர்வு காணவும், பொருட்களின் தரத்தை உயர்த்தவும், சுதந்திரமான, பயனுள்ள மற்றும் திறமையான ஒழுங்குமுறை பொறிமுறையின் தேவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது .
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமித்து இந்த விடயத்தை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பித்து சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கு மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.