கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் 201 பேர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகார இம்மாதம் 17ஆம் தேதி வரை ஒதுக்கப்பட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கலவர சம்பவத்தின் போது தப்பிச் சென்ற 30 கைதிகளை கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவிக்கையில், ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்விற்காக பரிந்துரைப்பது மிகவும் கடினமாகவுள்ளதாக தெரிவித்தார்.