வடமேற்கு மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காய்வாளர் ஒருவரை அச்சுறுத்திய பெண் சந்தேக நபர் மற்றும் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கணக்காய்வாளர் நாயகம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரியின் தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள் காரணமாக, தொலைபேசி மூலமாகவும், அவரது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர்களாலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இச்சம்பவம் தொடர்பில் வாரியபொல பிரதேசத்தில் இரண்டு சந்தேகநபர்களும் வெள்ளவத்தை பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் அழகுக்கலை நிபுணர் ஆவார். சந்தேகநபர்கள் இருவரும் வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.