வரி அதிகரிப்பினால் பயிற்சி புத்தகங்கள், பென்சில்கள், ரப்பர்கள் போன்ற எந்தவொரு பாடசாலை உபகரணங்களின் விலையும் அதிகரிக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வரி தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், சந்தையில் பாடசாலை உபகரணங்கள் வெவ்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதேவேளை, வரி அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் குரு இணையதளம் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியதுடன் அது தொடர்பில் அதிகாரிகளின் கவனமும் ஈர்க்கப்பட்டது. அதன்பிறகு, பாடசாலை உபகரணங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் அரசின் கவனம் திரும்பியுள்ளது.