வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா நகர மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணம் எரிசக்தி பொருளாதாரத்திற்கான முக்கிய பிரதேசம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.