வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாவது நாளிலும் இலாபம் ஈட்டும் நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் விவாதங்கள் இடம்பெற்றன.
இலாபமீட்டும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு என்று கூறி நாட்டை ஏலம் விடுவதற்கு தமது கட்சி அனுமதிக்காது என விவாதத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் டொலர் கையிருப்பை விரைவாகக் கட்டியெழுப்புவதற்கு இலாபம் ஈட்டும் பல நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என ஆளும் கட்சி சார்பில் விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.