மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை எதிர்வரும் இரண்டு தினங்களில் முற்றாக நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன், மீனவ மக்களின் எரிபொருள் தேவைக்காக 74 மண்ணெண்ணெய் பவுசர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 49 தனியார் துறை எரிபொருள் நிரப்பு நிலையங்கள், 18 கூட்டுறவு நிரப்பு நிலையங்கள் மற்றும் 07 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும்.அனுமதி வழங்கப்பட்டு பணம் செலுத்தாத காரணத்தினால் நேற்று பெற்றோலியத்தை வெளியிடாத அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று பெற்றோலியத்தை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கீர்த்தி தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, இதுவரை விநியோகிக்கப்படாத 18 கூட்டுறவு நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் விடுவித்துள்ளதாகவும், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில் கூட்டுறவு கிராமியத்தினால் தேவையான நிதி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்,தெரிவித்தார்.
மேலும். மீனவ மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தின் மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் நேற்று (22) முதல் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளைய தினத்திற்குள் முழுமையாக மீளமைக்கப்படும் எனவும் கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று வத்தளை ஹந்தல, பேருவளை (திவார துறைமுகம்), ஹந்தல விஜேசிங்க, காலி, அஹுங்கல்ல, தங்கல்ல, நொரோச்சோலை, புத்தளம், ஹலவத்த வெல்ல, அலுவத்த, குருபுத்தீநகர், கிடுவெட்டிநகர், புபுதுவெட்டிநகர், புதுவெட்டிநகர், வத்தளை ஹந்தல, பேருவளை (திவார துறைமுகம்) களவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளுக்கு 28 பெட்ரோலிய பவுசர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும், இது தவிர, மீன்வளத்துறையின் கீழ் இயங்கும் 14 மீன்பிடி துறைமுகங்களில் உள்ள மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மீனவர்களின் தேவைக்கு எரிபொருள் வழங்கும் பொறுப்பு நவம்பர் 22 முதல் தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மீனவர்களின் எரிபொருள் தேவைகள் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு மாகாணங்களின் ஆளுநர்களாலும், கடற்றொழில் திணைக்களத்தாலும் ஆராயப்படுகின்றது.
மேலும், மீன்பிடி நடவடிக்கைகளுக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருப்பின், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர் அல்லது மாகாண பிரதம செயலாளர், கூட்டுறவுச் செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கைகளை அனுப்புமாறு மீனவ சங்கங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி சமூக அலுவல்கள் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.