வங்கியின் வட்டி உயர்வு காரணமாக வங்கிகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்நிலைமை காரணமாக வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் ஆழமான மந்தநிலைக்குள் தள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உலகப் புகழ்பெற்ற Bloomberg இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.
அத்தோடு, இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் ஆசியாவின் அதிவேக பணவீக்கம் ஆகியவற்றின் விளைவுகளினால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.