நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை விவசாயிகளுக்கு 6.9 மில்லியன் லீற்றர் எரிபொருளைவழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் எஞ்சிய மற்றும் 8.06 மில்லியன் லீற்றர் எரிபொருளை நாட்டின் கடற்றொழிலுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி இம்மாதம் நெல் அறுவடையின் போது விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த பருவத்தில் இயற்கை சீற்றம் ஏற்படாத பட்சத்தில், எதிர்பார்த்த நெல் அறுவடை இலக்கை எட்ட முடியும் என்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.