கடுகன்னாவ, ஹெனாவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதோடு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, தெனியாய பன்சல வீதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
செங்குத்தான வீதியில் இருந்து பிரதான வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வழுக்கி வீதியிலிருந்து தவறி விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.