கல் ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதம் கந்தளாய் அக்போபுர ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை செல்லும் உதயதேவி ரயிலுக்கு கல் ஓயாவை திருகோணமலையை இணைக்கும் ரயில் இதுவாகும்.
மேலும், இந்த விபத்தில், இரண்டு ரயில் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட ரயிலில் பயணித்த 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பொதிகளை ஏற்றிச் சென்ற வண்டி ஒன்றும் மற்றைய ஒரு வண்டியும் தடம் புரண்டதாகவும், இந்த தடம் புரண்டதன் காரணமாக ரெகுலேட்டர் பிரேக் வண்டி கவிழ்ந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.